Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ கற்பகாம்பாள், மயிலாப்பூர்

Regular price Rs. 500.00
Regular price Rs. 300.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983 

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

அன்னையின் வழிபாட்டு மரபில் பூரணசந்திரனின் 16 கலைகளும் ஒருங்கே பெறப்பெற்ற மஹாசோடஷி என்னும் வடிவம், வழிபடும் அடியவர்களுக்குக் கலைகளில் தேர்ச்சியும், செல்வ வளமும் தந்து, கடைசியில் முக்தியும் தரவல்லது.

 சிறப்பான இவ்வடிவம் கொஞ்சும் புன்னகையோடும், பொங்கும் அழகோடும் என்றும் மாறா இளமையோடும் விளங்குவதாகப் பாடல் நூல்கள் கொண்டாடுகின்றன. 

அந்த இலக்கணத்தின்படி, நம் ஓவியர் அழகே வடிவான கற்பகாம்பிகையின் திருமேனியைத் தன் ஒவியத் திறமையால் மெருகேற்றிப் படைத்துள்ளார். கருவறையில் எரியும் தீபங்களின் ஒளியில் அபிஷேகிக்கப்படும் அன்னையின் திருமுகத்தில் வளைந்த புருவங்களும், கருணை விழிகளும், கூர்மையான நாசியும், கொஞ்சும் குருநகையும் கண்கொட்டாமல் பார்க்கும்படியாகச் செய்கிறது. 

கழுத்தில் அணிந்திருக்கும் தங்கத் தாலியும், காசு மாலையும், இரத்தினங்கள் இழைத்த ஸ்ரீசக்கர ஹாரமும் அணிந்து சிவப்பு பட்டு உடுத்தி, தோள் நிறைய மாலை அணிந்து கம்பீரமாக நிற்கும் இந்தக் கோலம், ‘எதற்கும் வருந்தாதே; நான் இருக்கிறேன்’ என்று சொல்லாமல் சொல்லும் வடிவமாக உள்ளது. 

இரத்தினங்கள் பதித்த கவசம் அணிவிக்கப்பட்ட திருக்கரங்களில் அமர்ந்திருக்கும் கிளி, நம்முடைய வேண்டுதல்களை அன்னையின் வலது செவியில் உறைப்பது போலே இருக்கிறது. பாசமும் அங்குசமும் ஏந்திய அன்னையின் இந்தக் கோலம், ஓவியரின் தூரிகைகள் செய்த அதிசயம் என்று சொல்லலாம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.