Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ பெருந்தேவி தாயார், காஞ்சிபுரம்

Regular price Rs. 500.00
Regular price Rs. 150.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1980

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

இந்த ஓவியத்தில் அன்னையின் அலங்காரமும் ஆபரணங்களும் துல்லியமாகக் கண்டு வரையப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்திற்கே உரிய புடவை மடிப்பும், அந்தப் பட்டின் நளினமும் வண்ணங்களால் தீட்டுவது எளிதன்று. அதேபோல மூலவரும், உற்சவரும் அணிந்திருக்கும் பெரிய பவளக் கற்களால் ஆன மாலை, இந்த ஆலயத்திற்கே உரிய தனிச்சிறப்பு. அதையும் விடாது ஆவணப்படுத்திய ஓவியரை எத்தனை பாராட்டினாலும் தகும். 

உற்சவரின் காதுகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் கெம்ப் கல்லால் ஆன வட்ட வடிவமான தோடும், கைகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் இரத்தினங்கள் பதித்த கவசமும் புகைப்படம் எடுத்தார் போலே தீட்டியுள்ளார். அன்னையின் கன்னங்களை ஒட்டி அணிவிக்கப்பட்டிருக்கும் வைரத்தோடும் மாட்டலும்கூட நேரில் காண்பது போலே தீட்டியுள்ளது இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு.

கருணையின் பிறப்பிடமாக அன்னையின் திருமுகமும் அதிலே மலர்ந்த மந்தகாச புன்னகையும் காண்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியாகச் செய்யும் நேர்த்தியும் எல்லா கலைஞர்களுக்கும் வராத ஒன்று.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.