Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, திருவானைக்காவல்

Regular price Rs. 500.00
Regular price Rs. 330.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

இந்தத் தேவியின் தனிச்சிறப்பே, அவள் காதுகளில் அணிந்திருக்கும் ஸ்ரீசக்கர தாடங்கங்கள் தான். அன்னையின் பெருகிவரும் அருளை ஒன்றுதிரட்டி, எதிரே நின்று வணங்கும் அடியவர்களுக்கு அது சரியான விகிதத்தில் சென்று சேரும்படியாகச் செய்வதற்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்ரீசக்கர யந்திரம் பதித்த காதணிகளை இறைவிக்குச் சூட்டியுள்ளார்கள்.

 ஸ்ரீசக்கரத்திலே இருக்கக்கூடிய பல்வேறு தேவதைகளும் ஒருசேர அருளக்கூடிய சிறப்பை ஓவியர் மிகநேர்த்தியாக ஸ்ரீசக்கரத்தின் பாகங்களை குறிப்பதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். 

அன்னையின் வலது கரத்திலே அமர்ந்திருக்கும் கிளி, நம்முடைய வேண்டுதல்களை அவள் திருச்செவியிலே கொண்டு சேர்ப்பது போலே தீட்டியிருக்கிறார். இருண்டிருக்கும் கருவறையில் உண்மை வடிவமான தெய்வத்தை, ஞானமாகிய விளக்கின் ஒளியிலே காண்கிறோம். இந்தச் சன்னதியில் எப்போதும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் உயரமான விளக்கு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதையும் விடாது ஓவியத்தில் காட்டி, அந்த விளக்கின் ஒளிபடரும் பகுதிகள் அதிக பிரகாசத்தோடு இருப்பதையும் துல்லியமாகக் காட்டிய ஓவியரின் திறம்தான் என்னே! 

அன்னையின் திருக்கழுத்தில் திருமாங்கல்யமும், அதைத் தொடர்ந்து அணிவிக்கப்பட்டிருக்கும் கல்பதித்த ஆரங்களும் செட்டிநாட்டுக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

கழுத்தணிகளிலே காணக்கூடிய பாரம்பரிய சிவப்பு, பச்சை, நீலக் கற்களை மட்டும் வரைந்து புகைப்படம் எடுத்தார் போலே இந்த ஓவியத்தைத் தீட்டியிருக்கிறார்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.