ஓவியர் மணிவேல்
ஸ்ரீ வடிவழகிய நம்பி, திருக்குறுங்குடி
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
வர்ணம் தீட்டப்பட்ட சுதை திருமேனியில் உள்ள வண்ணங்களை அப்படியே எடுத்து ஆண்டிருக்கிறார் ஓவியர். வைணவ ஆலயத்திற்கே உரிய வேட்டி மற்றும் புடவை மடிப்புகளையும் மூலவர் அணிந்திருக்கும் சாலகிராம மாலையும் ஓவியரின் கூர்மையான பார்வையை வெளிப்படுத்துகிறது.
உற்சவர் நெற்றியில் அணிந்திருக்கும் கருப்பு மை போன்ற கஸ்தூரி திலகமும், நாயக்கர் காலத்திய ஆபரணங்களும் இந்தப் பகுதியின் தனித்தன்மையைச் சுட்டுகிறது. விசாலமான திருமண் அணிந்து வைணவ நம்பியாக திருமால் விளங்குவதைக் காணமுடிகிறது. இந்த ஆலயத்தின் மலர் மாலைகளை ஆலய நந்தனவனத்திலேயே பறித்துத் தொடுக்கிறார்கள். ஆழ்வார்கள் பாடல்களில் கூறியிருக்கும் மலர்களை மட்டும் அணிவிக்கும் வழக்கத்தை இந்த ஓவியத்தில் தெளிவுறக் காண்பித்திருக்கிறார் ஓவியர்.
மூலவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி இருக்க, இறைவனின் திருவடிகளுக்குப் பக்கத்தில் பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள் அமர்ந்திருக்கக் காணலாம். மிகத்தொன்மையான உற்சவர் திருமேனியைத் தங்கக் கவசமிட்டுப் பாதுகாக்கும் வழக்கத்தையும் ஓவியர் காண்பித்திருப்பது தனிச்சிறப்பு.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
