Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ வயலூர் முருகன், திருச்சி

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985 

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

கருவரையில் வள்ளி, தேவசேனை சமயேதராக விளங்கும் முருகப் பெருமான், நான்கு திருக்கரங்களோடு காட்சி தருகிறார். மேலிரு கரங்களில் சக்தியாயுதம், வஜ்ராயுதம் ஏந்தி, கீழ் வலதுகரம் அபயம் அளிக்க இடது திருக்கரத்தை மடிமீது வைத்த நிலையில் சக்தி வேலும், சேவற்கொடியும் தாங்கி மயில்வாகனராக காட்சி தருகிறார். நெற்றியிலே விளங்கும் திருநீறும் முழுமதி என குளிர்ந்து இருக்கும் புன்முறுவலோடு காட்சி தரும் கந்தக் கடவுளை தரிசித்த மாத்திரத்தில் மனகவலைகள் விட்டு நீங்கும். அடியார்கள் மனம் நொந்தால், கண்டு பொறாதவனான முருகன் இன்னல் விளைவிக்கும் அசுர ஜென்மங்களை அழித்து அருளும் ஞான வீர சக்தி வடிவினன் என்பது தின்னம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.