ஓவியர் மணிவேல்
ஸ்ரீ மூகாம்பிகை, குன்றத்தூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1989
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கருவறையில் அலங்கரிக்கப்பட்ட தாமரை பீடத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அன்னை நான்கு திருக்கரங்களோடு காட்சி அளிக்கிறார். மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்கள் அபயமும் வரதமும் கொடுக்க தாயுள்ளத்தோடு வரும் அடியார்களுக்கு அருளும் பொருளும் வாரி வழங்குகிறாள். அன்னையின் காதுகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் ரத்தின குண்டலமும் நெற்றியிலே துலங்கும் திருநீற்றுப் பற்றையும் சிரசில் சூடி இருக்கும் கிரீடமும் கொண்டு கொழுவிற்கும் அன்னை நாள்தோறும் பல நூறு அடியார்களால் வணங்கப்படுகிறாள். அன்னைக்கு முன்புறம் சுயம்பு லிங்க பீடமும், அதற்குரிய சிறப்புகளோடு விளங்க காணலாம். கலைகளில் எல்லாம் சிறந்து விளங்க மூகாம்பிகையை வணங்கி வழிபடுவோம்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
