Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1980

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

கற்பகிரகத்தில் பிரம்மாண்டமான சுதை உருவமாக அன்னை காட்சி தருகிறாள். எட்டு கைகளில் டமருகம், பாசம், வில், அம்பு, திரிசூலம், மணி, வாள், கபலாம் என்ற ஆயதங்கள் ஏந்தி அன்னை ராஜபோகமாக வீற்றிருக்கும் கோலத்தை தரிசித்துக் கொண்டே இருக்கலாம். அன்னையின் திருவடியில் மூன்று அசுரர்களின் கொய்யப்பட்ட சிரங்கள் கிடக்கின்றன. கபால மாலை, எலுமிச்சை மாலை, நவரத்தினங்களால் ஆன பல்வேறு மாலைகள் என அலங்கரிக்கப்பட்ட அன்னை குருநகை முறுவல் செய்தும் அருளை வாரி இறைக்கும் கண் விழிகளால் நம்மை கண்டு கடாச்சிக்கும் கோலத்தை யாரும் முழுதுமாக வர்ணிக்க முடியாது. ஐந்தலை நாகம் குடை பிடிக்க, செந்தீகதிர்களால் ஆன மகுடம் அணிந்து அரசாட்சி செய்யும் சமயபுரத்தாளை எத்தனை கண்கள் கொண்டு பார்த்தாரோ நம்முடைய ஓவியர்தீர்த்த பிரசாதாமும், மருந்தும் வழங்கி தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பவளை பிறிவி பிணி நீங்க உளமாற வணங்குவோம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.