Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ பவானி அம்மன், பெரியபாளையம்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

 

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.இந்த ஆலயத்தில் கருவறையில் சுயம்பு வடிவிலே வெளிப்பட்ட அன்னை சிவலிங்கம் போல் காட்சி தருகிறாள். இந்த திருமேனிக்கு பின்புறம் நான்கு கரங்கள் தாங்கிய யோக மாயை ப வானி அம்மனாக கம்பீரமாக விளங்குிறாள். ஐந்தலை நாகம் குடை பிடிக்க, அக்னி சுவாலைகள் சூழ்ந்த கிரிடம் அணிந்து நாக குலைகளை காதில் தாங்கி ஆபரணங்கள் அணிந்து சர்வாலங்காரத்தோடு அன்னை காட்சி தருகிறாள். மேல் இரு கரங்களில் விஷணு ரூபமாக சங்கம் சக்கரமும்  ஏந்தி, கீழ் இரு கரங்களில் வாழும் கபால பாத்திரமும் தாங்கியிருக்கிறாள் அன்னை. உள்ளம் குளிர அடியவர்கள் தரிசிக்கும் இந்த கோலத்தை இங்கிருந்தபடியே காணும்படி சிறப்பாக அமைத்த ஓவியர் அம்மனின் அருளை முழுவதுமாக பெற்றவர் தான்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.