ஓவியர் மணிவேல்
ஸ்ரீ கிருஷ்ணா, உடுப்பி
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
வலது கையில் தயிர் கடையும் மத்து ஒன்றை ஏந்தியும், இடது திருக்கையை மடி மீது வைத்துக் கொண்டு நிற்கும் குழந்தை கண்ணனின் இந்த வடிவம் வேறெங்கும் காண முடியாதது. தஙக கவசம் சாத்தியும், பல்வேறு ஆபரணங்கள் அணிவித்தும் மத்வ மடாதிபதிகள் கண்ணனை நாள்தோறும் அலங்கரிப்பார்கள். பின்புறம் உள்ள பிரபையில் கருடனும் ஷனுமாறும் விளங்க துளசி அர்ச்சனையில் மிளிறுகிறார் இறைவன். கருவறையில் மூலவருக்கு முன்புறம் காலிங்க தர்ந்தனம் செய்யும் கண்ணன், பாண்டுரங்கன் பூவராகன், ராமன், என்ற பல தெய்வீக வடிவங்களும் விழங்க காணலாம்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
