Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்மன், பொழிச்சலூர்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1981

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

இந்த ஆலயத்தின் தனிக்கோவில் அம்மனாக விளங்குபவள் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்மன். திரமான சதுரபீடத்தின் மேல், தாமரை ஆசனத்தில் கம்பீரமாக நிற்கும் அன்னையின் திருக்கோலம் நம் கண்ணையும் கருத்தையும் கவரும். நான்கு கரங்களில் மேலிரு கரங்கள் பாசமும், அங்குசமுமம் தாங்கி நிற்க, கீழிரு கரங்கள் வேண்டி வரும் அடியவருக்கு அபயமம், வரதமும் தரும் நிலையில் அன்னை சிவபெருமானின் அருளே வடிவாக காட்சி தருகிறாள். சிவப்பு பட்டுடுத்தி  திருமேனி எங்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, அழகிய வேலைபாடு நிறைந்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு ரோஜா மலர் மாலைகள்  தோளில் சுமந்து இரத்தின திலகத்துடன் காட்சி தரும் அன்னையின் வடிவவை அபிராமி பட்டரைக் கொண்டு தான் வர்ணிக்க வைக்க முடியும். கருணை பொங்கும் கண்களினால் நம்மை ஒருமுறை கடாச்சித்து விட்டாலும் வாழ்வில் நாம் மென்மேலும் உயர்வது தின்னம். அடியார்களுக்கு இகபர சுகங்களை வாரி வழங்கும் ஆனந்தவள்ளி அம்மையின் திருவடிகளை வணங்குவோம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.