ஓவியர் மணிவேல்
ஸ்ரீ ஆஞ்சநேயர், நாமக்கல்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
18 அடி உயரத்தில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட இந்த ஆஞ்சநேயர், சிற்ப கலையின் மாண்பை எடுத்துரைக்கம் திருமேனி. கோரைப் பற்களை காட்டியபடி ஆனந்தமாக புன்னகைத்தும் விழிகளை அகல விரித்த ஆச்சரியத்தில் ஆழ்ந்த படியும் தனக்கே உரிய உடல் வலிமைத் தோற்ற காட்சி தந்தும், எத்தனை பலம் இருந்தாலும், இறைவன் முன்பு தான் ஒரு சேவகன் என்பதைக் காட்டும் விதமாக கைகளை குவித்து வணங்கிய நிலையிலும் நிற்கும் இந்த திருமேனி காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரும். இறைவனிடம் நீங்காத பற்றுக் கொண்ட நம்முடைய ஓவியர், அவருடைய ஆழ் மனதில் தேங்கியிருந்த பக்தியை இந்த ஓவியத்தின மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். இந்த பிரம்மாண்ட திருமேனியை, வெள்ளிக்வசம், அணிவித்த நிலையில் கண்களாலும் மனத்தாலும் வாரிப் பருகினால் அன்றி இவ்வளவு துல்லியமாக வரையமுடியாது. பாதாதி கேசம் அவர் அணிந்திருக்கும் ஆபரணங்கள் இடையிலே வைத்திருக்கும் குருவாள், தோள் வலிமை நெஞ்சுரம் கண்களில் வடியும் பக்தி என்று ஆஞ்சநேயரின் அத்தனை குணங்களையும் ஒரே ஓவியத்தில் காட்டியுள்ளார்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
