ஓவியர் மணிவேல்
ஸ்ரீபகவதி அம்மன், செங்கனூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1990
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கருவரையில் எழுந்தருளி இருக்கும் அன்னை இரண்டு திருக்கரங்களோடு விளங்குகிறாள். இந்த ஆலயத்தில் அன்னையின் வலது கரம் கீழ்நோக்கி தன் திருவடியை காண்பிக்கும் வரதகரமாகவும், இடது கரம் மேல் நோக்கி அபயம் வழங்கும் கரமாகவும் இருக்க காண்கிறோம். கேரள தேசத்தின் ஆசாரத்தை அனுசரித்து அன்னைக்கு வெள்ளை நிறத்தால் சேலை அணிவிக்கப்படுகிறது. திருமேனி எங்கும் ஆபரணங்கள் பூண்டியிருக்கும் அன்னையின் இந்த நின்ற கோலம் வேண்டி வரும் அடியவர்களை வசீகரிக்கும் சிறப்புடையது. தலையில் மணி மகுடமும் நெற்றியில் திலகமிட்டு காதுகளில் குண்டலங்கள் தவல திருமார்பின் மீது பலவகை ஆபரணங்கள் அணிந்து உமயம்மை கல்யாண காட்சி தருகிறாள். மூலவருக்கு அருகே வெள்ளியால் ஆன ஸ்ரீபலி மூர்த்தம் எழுந்தருளி உள்ளது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
