ஓவியர் மணிவேல்
ஸ்ரீசுப்பிரமணியசுவாமி, மருதமலை
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
எப்போதும் குளிர்ந்திருக்கும் ரம்மியமான இந்த ஆலயத்தை படிகள் தரிசிக்க வேண்டும். இளைத்து வருபவர்களுக்கு இன்பம் கொடுக்கும் கந்தனின் அழகு முகம் ஒருமுறை தரிசித்தால் அடியவர்கள் மனதை விட்டு நீங்காமல் நிலைத்திருக்கும்.
அந்த அற்புத கோலத்தை தவம் போலே இயற்றி ஓவியமக்கியுள்ளார் நம்முடைய ஓவியர்.
பத்ம நீடத்தின் மேல் அடியவருக்கு தஞ்சமாக இருக்கும் நிலம்பணிந்த திருவடிகளை ஊன்றி இளமை வனப்புத் தோன்ற ஒய்யாரமாக நிற்கும் முருகனைப் பாருங்கள். வலது கையிலே ஞான தண்டம் பிடித்து இடது கையை தொடையிலே நிறுத்தி உயிர்கள் பெறக் கூடிய ஆணந்தத்தின் வெளிப்பாடுதான் தான் என்று சாட்சி சொல்லி நிற்கிறான். திருமுகம் எங்கும் திருநீறு காப்பிட்டு துலங்க திருமேனி முழுவதும் தங்க கவசம்அணிந்து தோல் நிறைய ரோஜா மலர் மாலை அணிந்து நிற்கும் கந்தனை புகைப்படமாக வரைந்து கொடுத்திருக்கிறார்.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
