ஓவியர் மணிவேல்
ஸ்ரீ யோக நரசிம்மர், சோளிங்கர்
Couldn't load pickup availability
யோக நரசிம்மர், சோளிங்கர் - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
உயர்ந்த பீடத்தில் நான்கு திருக்கரங்களோடு திருவடிகளை மடித்த நிலையில் யோகம் செய்யும் நரசிம்மரை ஆழ்வார்கள் அக்காரகனி என்று அழகுத்தமிழில் அழைக்கிறார்கள். சங்கு – சக்கரம் ஏந்தி, கீழ் இரண்டு கரங்களைத் தொடையின் மேல் வைத்து தொங்கவிட்டபடி, யோகம் பயிலும் இந்தத் திருமேனி வேறெங்கும் காணமுடியாத அற்புதம்.
சாலகிராம மாலை அணிந்து, யோகப்பட்டையில் தசாவதார உருவங்களைப் பதித்து அலங்கரித்திருக்கக்கூடிய இந்த வடிவம், திருவிழா நாட்களிலும் காண முடியாத சிறப்புடையது. இரணியகசிபுவை சம்ஹாரம் செய்யவந்தபோது, திருமாலின் மார்பில் உறையும் கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் சிங்கப்பெருமானின் பிடறி மயிற்கற்றைகளிலே மறைந்திருந்தாளாம்.
அசுரனிடமும் அவளுடைய கருணை வெளிப்பட்டு சம்ஹாரத்தைத் தடுத்து விடுவாளோ என்ற எண்ணத்தில் இந்த ஏற்பாடு. ஆனால், இங்கே சம்ஹாரம் முடிந்து அருள் பொங்கும் அழகிய சிங்கமாக இறைவன் விளங்குவதால், அவர் திருமார்பில் உறையும் மகாலட்சுமி தெரியும்படியாக வரைந்திருக்கிறார் ஓவியர். கருவறையில் இருக்கும் அனந்தன், கருடன் ஆகிய திருமேனிகளையும், நடனமாடும் கிருஷ்ணரின் திருமேனியையும் சேர்த்தே வரைந்த சிறப்பு சொல்லில் அடங்காது.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
