ஓவியர் மணிவேல்
ஸ்ரீ மருந்தீஸ்வரர், திருவான்மியூர்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1990
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
மூலவர் சுயம்புமூர்த்தமாக புற்றின் உள்ளே பலகாலம் தங்கி இருந்தார். அப்போது இங்கே வந்த தெய்வீகப் பசு, அந்தப் புற்றின் வழியே பால் சுரந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டது. அந்தப் பசுவின் கால் தடம் பதிந்த வடு, மூலவர் திருமேனியில் இன்றும் இருப்பதைக் காணலாம். காலசந்தி வேளையில் பால் அபிஷேகம் செய்யும்போது, இந்த வடு தெளிவாகத் தெரியும். அதை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார் நம்முடைய ஓவியர்.
சுவாமியின் லிங்க பானத்தில் பதிந்துள்ள அந்த வடுக்களில் விளக்கு வெளிச்சம் பட்டு, தனியே தெரிவதைக் கண்டு இன்புறும்படியாக அமைந்துள்ளது இந்த ஓவியம்.
இதைப் பார்க்கும் அடியவர்கள் மனதில், ஒரு பசுவிற்கு அருள்புரிந்த ஈசன், நமக்கும் அருள் புரிவான் என்ற எண்ணம் திடமாக எழும். இதை வழங்கிய ஓவியரை மனதாரப் பாராட்டலாம். கருவறையில் சிவாலயங்களுக்கென்றே ஏற்பட்ட வளைந்த அடுக்கு தீபங்கள், பின்புறச் சுவரில் ஒளிர, அந்தத் தீபஓளியில் இறைவனைக் காணும் இந்த அனுபவம் நேரில் சென்றாலும் வாய்க்குமா என்று அறிய முடியவில்லை.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
