Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ உப்பிலியப்பன், திருநாகேஸ்வரம்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு  - 1985

ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

ஆழ்வார்கள் பாடிய தலமானாலும், மூலவரின் முக அமைப்பு பிற்காலத்தைச் சேர்ந்தது போலே இருக்கிறது பிரமாண்டமான இந்த வடிவமைப்பைச் சிறு மாற்றம்கூட செய்யாது, அப்படியே ஓவியமாக்கித் தந்த நம்முடைய ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 இந்தப் பெருமாளின் சிறப்பே, அவருடைய கம்பீரமான தோற்றப்பொலிவுதான். மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கி, கீழ் வலது கரத்தால் தன் திருவடியில் தஞ்சம் அடையும்படி அறிவுறுத்தியும், கீழ் இடது கரத்தை ஒய்யாரமாகத் தனது தொடையில் நிறுத்தியும் காட்சி தருகிறார்.

 தோளிலிருந்து தொடங்கும் சாலகிராம மாலையும் இடுப்பில் அணிந்திருக்கும் தசாவதார ஒட்டியாணமும் நீளமான லட்சுமிகாரமும் இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகள். அவற்றில் பதிந்திருக்கும் வடிவங்களைக்கூட விடாது ஆவணப்படுத்தி இருக்கிறார் நம்முடைய ஓவியர்.

 மூலவர் திருமேனிக்கு வலது பக்கத்தில் பூமாதேவியும், இடது பக்கத்தில் மார்க்கண்டேய முனிவரும் வணங்கியபடி வீற்றிருக்கிறார்கள். அழகிற்கும், வழங்கும் அருளுக்கும் ஒப்பிலாத ஒருவராக, ஒப்பிலியப்பனாக இருக்கும் இந்த இறைவனின் வடிவழகை முழுவதும் தூரிகை கொண்டு எழுதிவிடுவது அவ்வளவு சுலபமல்ல. அந்த இறைவனே வண்ணத்திலும் எண்ணத்திலும் குடிகொண்டிருக்கும் நம்முடைய ஓவியருக்கு மட்டுமே இது சாத்தியம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.