ஓவியர் மணிவேல்
ஸ்ரீ இராமநாத சுவாமி, இராமேஸ்வரம்
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1994
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
சதுரபீட ஆவுடையாரோடு கூடிய சிவலிங்கம் பல்வேறு மன்னர்களால் வழங்கப்பட்ட ஆபரணங்கள் அணிந்து, சிறப்பாக விளங்கும் காட்சியை ஓவியர் படம் பிடித்துள்ளார். மரகதக் கற்கள் அமைந்த நாகாபரணமும், தங்க வில்வ இலைகளால் ஆன மாலையும், தங்க பூண் போட்ட ருத்ராட்ச மாலையையும்கூட தெளிவாக இந்த ஓவியத்தில் கண்டு தரிசிக்கலாம்.
சுவாமிக்கு முன்பாக, இந்த ஆலயத்தின் சிறப்பு வாய்ந்த ஸ்படிக லிங்கம் எழுந்தருளச் செய்திருக்கும் பாங்கு, நேரில் சென்றாலும் காண முடியாதது. ஸ்படிக லிங்கத்தை வைத்திருக்கும் வெள்ளிப் பெட்டி சுவாமிக்கு வலது புறமும், போக சக்தியான அம்பிகை இடது புறமும் வீற்றிருக்க, கற்பக் கிரகத்தின் எல்லா அம்சங்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் ஓவியர்.
இதில் மற்றுமொரு சிறப்பு பள்ளியறைச் சொக்கர் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் அமர்ந்த நிலையில் உள்ள வடிவமும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது. சுவாமிக்குப் பின்னுள்ள விளக்கு வரிசைகளும், பிரபையின் வடிவமைப்பும் பாண்டிய நாட்டிற்கே உரிய கலை வெளிப்பாடு.
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
