Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ ஹயக்ரீவர், நங்கநல்லூர்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983 

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

20ம் நூற்றாண்டு இறுதியில் நங்கை நல்லூரில் ஏற்படுத்தப்பட்டஇந்த ஆலயத்தில் ஞான வடிவிலான ஹயக்ரீவ கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவராக காட்சி தருகிறார்.வலது திருவடியை தாமரை பீடத்தில் நிறுத்தி, இடது திருவடியை பீடத்தில் அமர்த்தி மடி மீது அருளே வடிவான அன்னையை ஏந்தி காட்சி தரும்  பெருமானின் வடிவழகை இந்த நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஐந்தலை ஆதிசேஷன் குடடை பிடிக்க சந்திர பிரைபை பின்புறம் சூழ வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பெருமாளை வழிபடுவோம் வாருங்கள்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.