Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ பகவதி அம்மன், கன்னியாகுமரி

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1984

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

வேறெங்கும் காண முடியாத அன்னையின் வடிவம் தானே சிவபக்ததையாக கையில் ஜெபமாலை ஏந்தி நிற்கிறாள். இரண்டே திருக்கரங்கள் கொண்டு விளங்கும் கன்னியாகுமரி அன்னை  தாமரைப் பீடடத்ில் தன் திருவடிகளை அழுத்தி நிலைகொண்டு வலது கரத்தில் ஜெயமாலையும், இடது கரத்தை தன் மடியில் வைத்துக் கொண்டு மோனத் தவம் செய்கிறாள்.

தவசீலர்களும் மகான்களும் எப்போதும் நிறைந்திருக்கும் பாரத தேசத்தை தன் தவவலிமையால் காத்திருக்கும் அன்னையின் திருமுகத்தில் அன்பும் வைராக்கியமும் ஒருசேர விளங்க பார்க்கிறோம். கேரள தேசத்தை சேர்ந்த அந்தணர்கள் பூஜை செய்யும் இவ் ஆலயத்தில் வெள்ளியால் ஆன ஸ்ரீபலி மூர்த்தம் அன்னையின் அருகே எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். 

எத்தனையோ ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் கன்னியாகுமரி அன்னையின் தனிச்சிறப்பு அவள், மூக்கில் அணிந்திருக்கும் விலையுயர்ந்த வைரக்கல்லால் ஆன மூக்குத்தி. அதையும் விடாது ஓவியத்தில் காட்டி அன்னையின் மயக்கும் அழகிலும், ஈர்க்கும் அருளிலும் நம்மை ஆட்படுத்தி இருக்கிறார் ஓவியர்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.