Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ சாமூண்டீஸ்வரி, மைசூர்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு -1986

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆலயத்தின் உள்ளே குளிர்ந்திருக்கும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கருவறையில் அன்னை ரத்தின் பீடத்தில் வீராசனத்தில்  வலது திருவடியை மேலே வளைத்து வைத்து இடது திருவடியால் அசுரனை அழுத்தி 8 திருக்கரங்களோடு கம்பீரமாக காட்சி தருகிறாள். அன்னையின் திருக்கரங்களில் திரிசூலம், வாள், கத்தி, நாகப்பாசம், உடுக்கை, கேடயம், கண்டாமணி, கபாலபாத்திரம் ஆகியவைகளை ஏந்தியுள்ளாள். சம்ஹாரம் செய்யும் போதும் அன்னையின் திருமுகத்தில் ரெளத்திரம் அல்லாது பூத்த புன்முறுவலோடு விளங்க காண்கிறோம். அன்னையின் திருவடியால் அழுத்தப்பட்ட பெரும்பேரு இந்த அசுரனுக்கு வாய்த்ததே. ஆணவத்தின் வடிவமான அசுரன் அந்த திருவடிகளை  புகழிடமாக கொண்டிருந்தாள் அன்னையின் அருளை பெற்றிருக்கலாம். எதிர்த்து வந்ததாள் ஆணவம் அழிக்கப்பட்டு அதன்பின் அருளும் வழங்கப்பட்டான். தங்க கவசமிட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கம் அன்னைக்கு பல்வேறு உபசாரங்கள் இந்த ஆலயத்தில் நடைபெறும். அன்னைக்கு முன்புறம் உள்ள எந்திரத்திற்கு சிறப்பு வழிபாடுகளும், கும்குமார்ச்சனையும் செய்யப்படும். வாழ்வில் குறைகள் நீங்கி நிறைகள் மலர அருள் வடிவான அன்னையை நாமும் வணங்குவோம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.