Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி, பெங்களூரு

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

தேவி வழிபாட்டில் உயர்ந்த நிலையில் வழிபடப்படும் வடிவம் அன்னை ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரியுடையது. ஸ்ரீசக்ர பிந்துவின் பரிணமிக்கம் இவ்வடிவம் நான்கு  திருக்கரங்களோடு பாசம், அங்குசம், மலர் கனை, கரும்பு வில் ஏந்தி காட்சி தரும் திருவுரு. திருமுடி முதல் திருவடி வரையிலும் பல்வேறு ஆபரணங்கள் அணிந்து அன்னை அலங்கரிக்கப்பட்ட அழகிய சம்ஹாசனத்தில் வீற்றிருக்கும் இந்த கோலத்தை கொண்டாடாத கவிகளே இல்லை. நெற்றியில் சூடிய செந்திலகமும் அன்னையின் அழகிய அகன்ற திரு விழியும் கூர்மையான நாசியும் அதில் அணிவிக்கப்பட்டிருக்கும் முத்து மணி மூக்குத்தியும் குவித்த இதழில் நிலவும் மந்தகாச புன்னகையும் தாங்கிய அன்னையின் திருமுகத்தை கண்ட மாத்திரத்தில் நம்முடைய வினைகளெல்லாம் விட்டு அகலும். ஸ்ரீகாமேஸ்வரனோடு இணைந்த வடிவில் அன்னை விளங்குவதால் இவளை வணங்கும் அடியார்கள் எல்லா சிறப்புகளையும் பெறுவார்கள். கலங்கிய மனத்தோடு வரும் அடியவர்களுக்கு புகழிடமாக தன்னுடைய திருவடிகளை காட்டிக் கொடுக்கும் அன்னையை நாமறிந்த மொழிகளிலே பாடிக் கொண்டாடுவோம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.