Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ இராஜகாளியம்மன், தேத்துப்பட்டி

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1988 

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

இங்கே அன்னையின் இரண்டு திருமேனிகள் வழிபாட்டில் உள்ளன. அத்திமரத்தால் ஆன திருமேனி பழையது. சிம்மாசனத்தில் வலது திருவடியை கீழே நிறுத்தி இடது திருவடியை மடித்து அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களோடும் பாசம், அங்குசம், சூலம், கபாலம் ஏந்தி காட்சி தருகிறாள் ராஜகாளியம்மன் பாண்டியர்களுடைய குல தெய்வமாக அறிப்படுவதால் கையிலே செங்கோளும் ஏந்தி இருக்கிறாள். அக்னி சுவாலைகளை கிரீடமாக அணிந்தும் திருமேனி எங்கும் ஆபரணங்கள் சூடியும் எலுமிச்சை மாலை, ரோஜாப்பூ மாலை அலங்கரிக்க அபயம் வழங்கும் அன்னையின் வடிவை பார்த்தால் ‘அம்பிகையை சரணடைந்தால் அதிக வரம் பெறலாம்’ என்ற மகா கவி பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.