Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ அஷ்டாதச புஜ துர்கை அம்மன், சேலம்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

இந்த ஆலயத்தில் முருகப்பெருமானும், 18 கைகளோடு கூடிய மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியும் பிரதான தெய்வங்களாக விளங்குகிறார்கள். ஸ்ரீமத் தேவி பாகவதத்தில் ஆதிபராசக்தியான அன்னையின் பல்வேறு வடிவங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. வெவ்வேறு அசுரர்களை அழிக்க அன்னை வெவ்வேறு வடிவங்கள் தாங்கியும், தன்னுடைய சக்திகளில் சிலரை நியமித்தும் அழித்தாள். அதில், அன்னை எடுத்த பெரும் வீரம் நிறைந்த வடிவம் தான் அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி. பெயருக்கேற்றால் போல் அன்னை 18 கரங்களோடு சிம்ம வாகினியாக தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள் தருகிறாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம் திரிசூலம் மணி சக்தி, வஜ்ரம், வில், அம்பு, தாமரை மலர், கபாலம், கதை, குருவாள், அஷ்டமாலை, கமண்டலம், வாள், கேடயம், என்று எல்லா தெய்வங்களின் சிறப்பு ஆயுதங்களையும் தானே தரித்து அன்னை நான்முகன், திருமால், இந்திரன் என தேவர்கள் எல்லோரையும் ஈன்றவளாக காட்சி தருகிறாள். நவரத்தினங்கள் இழைத்த கிரீடம், காதணிகள், பதக்கங்கள் அணிந்தும், கால்களில் வீரச் சிலம்பு தரித்தும் நெற்றியில் திலகமாக குங்கும் அணிந்தும் மந்தகாச புன்னகையோடு விளங்கும் அன்னையை பார்த்த மாத்திரத்தில் நம் கவலைகள் எல்லாம் பறந்து போகும். அம்பிகைக்கு பின் உள்ள பிரபையில் படர்ந்து இருக்கும் கொடியில் நவதுர்கைகளும் அழகாக விளங்க காணலாம்.

மகிஷ சம்ஹாரம் செய்து அவன் மேல் நின்று அருளும் அன்னையின் முன்புறம் உள்ள மகாமேருவையும் நாள்தோறும் வணங்கும் அடியார்களுக்கு எந்த பிணியும் சேராது.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.