ஓவியர் மணிவேல்
ஸ்ரீரெங்கநாதர், காரமடை
Couldn't load pickup availability
ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1983
ஓவியர் ஆ. மணிவேல்:
சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.
கருவறையில் சிவலிங்க திரிமேனி போலே காட்சி தருகிறார் அரங்கநாதப் பெருமாள். சதுர பீட ஆவுடையார் மேலே அன்று தொட்டிய நாயக்கருக்கு காட்சி கொடுத்த சுயம்பு திருமேனியோடு வீற்றிருக்கிறார். பக்தர்கள் திருமாலின் வடிவை அறிந்து கொள்ள உதவியாக திருமுகத்தில் கண்கள் நாசி, திருவாய், போன்றவை பொருத்தப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. மற்ற ஆலயங்கள் போல் இங்கே அடியார்களுக்கு சடாரி வைக்காமல் இராமபிராணின் ஆயுதமான பானத்தை தலையில் வைத்து ஆசீர்வதிக்கின்றனர்.
சிரசில் கிரீடம் தாங்கி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அரங்கநாதனை தரிசித்தால் எல்லா கவலைகளும் தீர்த்து மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
அனுப்பும் செலவு
அனுப்பும் செலவு
- எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
-
விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.
Share
