Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீதிரிபுர சுந்தரி, திரிசூலம்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 2008

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

அம்பிகை முப்புறங்களிலும் அழகு வாய்ந்தவளாக சிவபெருமானின் அருள் வடிவாக காட்சி தருகிறாள்தாமரை பீடத்தில் நின்ற நிலையில் காட்சி தரும் அன்னை அக் ஷ மாலையும், தாமரை மலரையும் ஏந்தி கலைகளுக்கு நாயகியக விளங்குகிறாள். குற்றம் செய்தவர்கள் இவளை தரிசித்த மாத்திரத்தில் செய்த தவறை உணர்ந்தவர்களாக அன்னையின் முன்பாக அன்று பிறந்தவர்கள் போலே மாறி விடுகிறார்கள். அன்னையின் முகத்தில் தவலும் மந்தகாச புன்னகை குளிர்ந்த நிலவைக் காட்டிலும் குளிர்ச்சியூட்டுவது. பச்சை பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிந்து நான் இருக்கிறேன் அஞ்சாதே என்று சொல்லுவது போல் உள்ளது அன்னையின் அருள் தோற்றம்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.