Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீகணேஷா, நங்கநல்லூர்

Regular price Rs. 500.00
Regular price Rs. 200.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

எந்த செயலையும் தொடங்கும் முன் விநாயகப் பெருமானை வழிபடுதல் தமிழர் மரபு. அவருடைய 16 வெவ்வேறு வடிவங்களில் மகாகணபதியாக வீற்றிருக்கும் திருக்கோலம் பிரசித்தி பெற்றது. பத்ம பீடத்திலே அமர்ந்துபிரம்மாண்டத்தின் வடிவமான தன்னுடைய தொப்பையை நிறுத்தி திருவடிகளை பீடத்தின் மேல் மடித்து வைத்து நான்கு திருக்கரங்களோடு காட்சி தருவார். மேலிரு கரங்கள் பாசமும், அங்குசமும் ஏந்தி இருக்க கீழிரு கரங்கள் ஓடிந்த தந்தத்தையும் மோதகத்தையும் தாங்கி எல்லாம் தன்னுள் அடக்கம் என்ற பொருள்பட கம்பீரமாக காட்சி தருகிறார். தலையிலே சூட்டிய ரத்தின கிரீடமும் நெற்றில் தரித்திருக்கும் திருநீற்று பட்டையும் திருமேனியில் சாத்தப்பட்டிருக்கும் ஆபரணங்களும் அடியார்கள் இவர் பேரில் கொண்ட அன்பின் அடையாளங்கள். பட்டு ஆடைகள் உடுத்தி, வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கினங்களை தீர்த்து மங்களங்களை வாழ்வில் நிலைக்கச் செய்பவர்.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.