Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ முருகர், வல்லக்கோட்டை

Regular price Rs. 500.00
Regular price Rs. 300.00 Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு -1986

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

அருணகிரிநாதர் திருப்போரூரில் முருகனைத் தரிசித்து மறுநாள் திருத்தணி தலத்திற்கு செல்ல திட்டமிட்டபடியே உறங்கிப் போனார். கனவில் காட்சி கொடுத்த முருகப் பெருமான்வல்லக்கோட்டையை மறந்தனையோஎன்று கேட்க, அவர் வழிகாட்டுதலின்படி இந்த தலத்திற்கு வந்து, முருகப் பெருமானின் கம்பிரமான தோற்றத்தில் மயங்கி  திருப்புகழ் பாடல்களை பாடினார்.

உயரமான திருவுறுஅருள் பொங்கும் திருமுகம், அன்பு பொழியும் கண்களோடு கையிலே சக்தியாயுதம் வஜ்ராயுதம் ஏந்தி கருவறையில் இருக்கும் குமரனை பார்க்க ஆயிரம் கண்கள் போதாதது. அப்படிபபட்ட இந்த வடிவினை கண் கொட்டாமல் பார்த்து அதை தான் தூாரிகையின் வழியே வெளிப்படுத்திய ஓவியரை என்ன சொல்லி பாராட்டலாம். 

தங்க கவசம் அணிந்து பல்வேறு ஆபரணங்கள் பூண்டு, வேலும், சேவற்கொடியும் சுமந்து காட்சி தரும் முருகனை வள்ளியும்தெய்வானையும் இருபுறமும் நின்று கண்டுகொட்டாமல் கண்டு ரசிப்பது போலே உள்ளது.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.