Skip to product information
1 of 1

ஓவியர் மணிவேல்

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், சோளிங்கர்

Regular price Rs. 500.00
Regular price Sale price Rs. 500.00
Sale Sold out
Size
Material

ஓவியம் வரையப்பட்ட ஆண்டு - 1985

ஓவியர் ஆ. மணிவேல்:


சிக்கல் சிங்காலவேலரின் அருளாசியுடன் ஸ்தபதி என்ற உயர் ஸ்தானத்தில் இறைத் தொண்டாற்றும் குலமரபில் அக்கிராமத்தில் பிறந்தவர் ஆ. மணிவேல். “ஆலய நுண்கலை அரசு” என்று பட்டம் பெற்ற எஸ். என். ஆறுமுக ஆச்சாரியருக்கு மகனாக 1941ல் பிறந்தார். ஸ்ரீ மணிவேலுக்குத் தந்தையே குருவானது தெய்வத்தின் அனுக்ரஹம். சிறந்த சிற்பியாக விளங்கிய தந்தையார் வடித்த ஒரு செவ்வந்திப்பூவின் அழகும் நேர்த்தியும் இவருக்கு வரைகலையின் மீது ஒரு ஈர்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.
அப்பாவின் அருகாமையில் ஓவியம் வரையக் கற்றுத் தேர்ந்தார். ஓவியம் வரைவதை பணம் தரும் தொழிலாகவோ பொழுதுபோக்காகவோ எண்ணாமல் தெய்வ உருவங்களை ஓவியமாக்குவதில் தனது தந்தையார் சொல்லிக்கொடுத்த சாஸ்திர விதிமுறைகள் மற்றும் விரத முறைகளையும் கடைப்பிடித்து இதை ஒரு தவம்போல இன்றுவரைச் செய்து வருகிறார். தெய்வங்களின் திருவுருவத்தை யார் வரையச் சொன்னாலும் தனக்கு அத்தெய்வத்தின் “உத்தரவு” கிடைத்தால் மட்டுமே வரைந்துதந்து மனநிறைவு பெறுகிறார்.

வானர வீரரான ஆஞ்சநேயர், திருமால் முன்பாக நின்றபடி கைகூப்பி பக்தியோடு நிற்கும் வடிவங்களை பல ஆலயங்களில் காணலாம். ஆனால், நான்கு கரங்களோடு யோகத்தில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரை சோளிங்கர் தலத்தில் சிறப்பாகத் தரிசக்கலாம். 

இந்த வடிவத்தின் தனிச்சிறப்பு, கீழ் இரண்டு திருக்கரங்களும் வரும் அடியவர்களை வா என்று அழைக்கும் பாவனையில் அமைந்திருப்பதுதான். கை விரல்களின் மடிப்பைக்கூட மிகவும் நேர்த்தியாகத் தன் ஒவியத்திலே அமைத்திருக்கிறார் நம்முடைய ஓவியர். 

வாயு மைந்தனின் மேல் திருக்கரங்களில் சக்கரமும், சங்கும் தாங்கியிருக்கிறார். இவை இரண்டும் திருமாலே அவருக்கு வழங்கப்பட்டது. பெரியமலையில் உள்ள மூலவரான யோக நரசிம்மரின் அதே அமைப்பில் அவரின் அடியவரான ஆஞ்சநேயரையும் மிகத்துல்லியமாகக் காட்டியிருக்கிறார்.

நின்றநிலையில் உள்ள உற்சவரையும், மூலவருக்கு முன்பாக நிறுத்தி ஓவியத்தில் தீட்டியிருப்பது நம் ஓவியரின் திட்டமிடலுக்கு மற்றுமொரு சான்று.

அனுப்பும் செலவு

  1. எதிர்பார்க்கப்படும் நாட்கள்- ஆர்டர் செய்தபின் 10-12 வேலை நாட்களில் ஓவியம் கிடைக்கும் (இந்தியாவிற்குள்). வெளிநாடுகளுக்கு அனுப்ப எங்களை தொடர்பு கொள்ளவும்.
  2. விற்பனை செய்யப்பட்ட ஓவியம் திரும்பப் பெற இயலாது.